உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 01, 2010

வக்கீல்கள், குமஸ்தாக்கள் கோர்ட் புறக்கணிப்பு

கடலூர் : 

                  கடலூரில் கோர்ட் ஸ்டாம்பு கிடைக்காததை கண்டித்து குமாஸ் தாக்கள், வக்கீல்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப் பட்டன.
 
                     கடலூரில் கடந்த இரண்டு மாதங்களாக 1 முதல் 5 ரூபாய் வரையிலான கோர்ட் பீஸ் ஸ்டாம்புகள்  கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து கடலூர் வக்கீல் குமாஸ்தாக்கள் சங்கம் சார்பில் இரண்டு நாள் கோர்ட் புறக்கணிப்பு நேற்று முதல் துவங்கியது. இதற்கு ஆதரவாக கடலூர் வக்கீல்கள் சங்கம் சார்பில் தலைவர் லோகநாதன், செயலாளர் துரை பிரேம்குமார் தலைமையில் வக்கீல்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட் பணிகள் பாதிக்கப்பட்டன. கோர்ட் புறக்கணிப்பு இன்று (2ம் தேதியும்) நடக்கிறது.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior