உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 01, 2010

புவனகிரியில் மேம்பாட்டுக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்


புவனகிரி :  

                  கீரப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை கல்வி திட்டத் தில் மேம்பாட்டுக்குழு உறுப்பினர்களுக் கான பயிற்சி முகாம் நடந்தது.
 
                      வேளங்கிப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியர் காந்திமதி வரவேற்றார். தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணாபுரம் பாலகணபதி, கீரப்பாளையம் தமிழ்மணி தேசிய இடைநிலை கல்விக்குழு நிதியினை கையாளுதல், கணக்குகளை பராமரித்தல், எஸ்.எம்.டி.சி.மூலம் பள்ளியில் நடைபெற வேண்டிய செயல்கள் மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டபணிகள் குறித்து விளக்கினர். முன்னாள் ஊராட்சி தலைவர் பன்னீர்செல்வம் மக்களின் பங்கு குறித்து பேசினார். சிதம்பரம் சுற்றியுள்ள 11 பள்ளிகளிலிருந்து தலா ஐந்து பேர் பங்கேற்றனர்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior