உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 12, 2010

வீமன் ஏரியில் மீன்கள் சாவு

விருத்தாசலம்:
 
              திட்டக்குடி அருகே வதிஸ்ட்டபுரம் கிராமத்தில் உள்ள வீமன் ஏரியில் செவ்வாய்க்கிழமை காலை மீன்கள் இறந்து மிதந்தன. இந்த ஏரியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தது. அதே பகுதியைச் சேர்ந்த முருகையன் கடந்த 4 மாதங்களுக்கு முன்  குத்தகை எடுத்து மீன் பிடித்து வந்துள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை ஏரி மீன்கள் இறந்து மிதந்தன. இதுகுறித்து முருகையன்  திட்டக்குடி வட்டாட்சியர் கண்ணனிடம் முறையிட்டார். இதையடுத்து, இறந்த மீன்களை ஆய்வுக்காக கால்நடைத் துறைக்கும், ஏரிநீரை உரிய ஆய்வுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior