உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 12, 2010

சிதம்பரம் மாலைக்கட்டித் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிக்கும் கருவி

சிதம்பரம்:

                       சிதம்பரம் மாலைக்கட்டித் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடிநீர் சுத்திகரிக்கும் கருவி பொருத்தும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. ரூ.15 ஆயிரம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிக்கும் கருவியை கமல்கோத்தாரி என்பவர் இலவசமாக பள்ளிக்கு வழங்கியுள்ளார்.  இக்கருவியை பொருத்தும் விழாவுக்கு நகரமன்ற உறுப்பினரும், கல்விக்குழுத் தலைவருமான வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை த.ஆ.வாசுகி வரவேற்றார்.  உத்தம்சந்த் கோத்தாரி கருவியை இயக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மகாவீர்சந்த், ஹீராசந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior