உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 12, 2010

தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வது திமு.க., மட்டும் தான் அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு

சிறுபாக்கம் : 
            
            தொண்டர்களின் உணர் வுகளை புரிந்து கொள்வது தி.மு.க., மட்டும் தான் என அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார். சிறுபாக்கம் அடுத்த மலையனூர் கிராமத்தில் தி.மு.க., பிரமுகர் பொன் னுசாமி படத்திறப்பு மற் றும் நினைவு கல் வெட்டு திறப்பு விழா நடந்தது. முன்னாள் எம்.பி., கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் ரவிச்சந்திரன், துணை தலைவர் சின்னசாமி, அவை தலைவர் அமிர்தலிங்கம் முன்னிலை வகித்தனர். தொண்டரணி அமைப்பாளர் செங்குட்டுவன் வரவேற்றார். 

விழாவில் படம் மற்றும் கல்வெட்டை திறந்து அமைச்சர் பன்னீர் செல் வம் பேசுகையில்

                'கருணாநிதியும், ஸ்டாலினும் தொண் டர்களின் உணர்வுகளை புரிந்து கழகத்தை கோவிலாக கட்டி காத்து வருகின்றனர். தி.மு.க., இரும்புக் கோட்டை, யாராலும் அசைத்து பார்க்க முடியாது. ஒரு ரூபாய்க்கு அரிசி, 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி ஆகியவைகளை மக்களுக் காக செய்துள்ளோம்' என பேசினார். கூட்டத்தில் திட்டக்குடி நகர செயலாளர் பரமகுரு, நல்லூர் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி, ராவணன், பாண்டியன், சின்னசாமி, குமரவேலு, ஆறுமுகம், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior