உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 12, 2010

சத்துணவு பணியாளர் சங்க ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

             கடலூரில் தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
                 சத்துணவு பணியாளர்களுக்கு 27 ஆண்டுகளாகியும் பணி விதிகள் ஏற்படுத்தவில்லை. பணி நிரந் தரம் செய்ய வேண்டும். அரசு விதியின் படி ஓய்வூதியம், அகவிலைப்படி வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மைய செலவினத் தொகையை இரு முறை மாற்றியமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சற்குரு தலைமை தாங்கினார். செயலாளர் செல்வராசு வரவேற்றார். ஒன்றிய தலைவர்கள் சபாநாயகம், தங்கராசு, துரைராஜ், அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர்கள் சேவியர், ராமதாஸ், பழனிவேல் முன்னிலை வகித்தனர். அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் விஜயகுமார், செயலாளர் கோவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior