உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 12, 2010

ஊழல் எதிர்ப்பு இயக்க பொதுக்குழு கூட்டம்

ஸ்ரீமுஷ்ணம் : 

                   ஊழல் எதிர்ப்பு இயக்க பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்தல் ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்தது. இயக்கத் தலைவர் வள்ளுவன் தலைமை தாங்கினார். புலவர் கண்ணன் வரவேற்றார். ஸ்ரீமுஷ்ணம் கிளைத் தலைவர் சேதுமாதவன், விருத்தாசலம் கிளைத் தலைவர் கலிவரதன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் மாவட்ட செயலாளர் அப்பாஜி பேசினார்.

                பொருளாளர் செல்வராஜ் வரவு செலவு கணக்குகளை வாசித்தார். கூட்டத்தில், ஊழல் வழக்குகளில் சிக்கியவர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவது குறித்த விவரங்களை செய்தித் தாள்கள் மற்றும் அவர்கள் படங்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் வெளியிடுவது. தகவல் ஆணையர் சாரதா நம்பி ஆரூரானை மாற்ற கோரி சென்னை தகவல் ஆணையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து நடந்த நிர்வாகிகள் தேர்தலில் வேணுகோபால் தேர்தல் ஆணையாளராக பணியாற்றினார். மாவட்ட தலைவராக வள்ளுவன், துணைத் தலைவர் ராஜாராம், செயலாளர் அப்பாஜி, இணை செயலாளர் குணசேகரன், பொருளாளர் செல்வராசு, செயற்குழு உறுப்பினர்களாக ரவி, ரங்கராஜன், கலைமணி, பூவராகமூர்த்தி, ஸ்டெல்லா மேரி, ஜெயராமன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior