உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 12, 2010

தொடக்கக் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வீட்டு வாடகைப்படி கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

               தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் தொடக்க கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கு வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும். இரண்டு ஆண்டுக்கு ஒரு ஊதிய உயர்வு என்பதை மாற்றி ஆண்டிற்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தகுதி உள்ள ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
                  முன்னதாக திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். பொருளாளர் விஷ்ணுராம் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் பாண்டியன் துவக்கி வைத்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior