உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 12, 2010

ஆற்றில் மூழ்கிய மாணவர் உடல் மீட்பு

சிதம்பரம் : 

                    காட்டுமன்னார்கோயில் அருகே ஆற்றில் மூழ்கிய மாணவர் உடல் மீட்கப்பட்டது. காட்டுமன்னார்கோயில் உடையார்குடி அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் பவுல் சுந்தர். இவரது மனைவி கீதாரித்தா இருவரும் ஆசிரியர்கள். கடந்த 9ம் தேதி கடலூர் பள்ளியில் பிளஸ் 1 படித்த தனது மகன் லெஸ்லி டிமல்லோ (17)வை அழைத்துக் கொண்டு காட்டுமன்னார்கோவிலுக்கு மீன் வாங்கச் சென்றனர். கீழணையில் இருந்து வீராணத்திற்கு வடவாறு வழியாக தண்ணீர் வரும் நிலையில் வடவாற்றில் குளிக்க ஆசைப்பட்டனர். லெஸ்லி டிமல்லோ தண்ணீரில் இறங்கி குளிக்கும்போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இரவு முழுவதும் தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வீரர்கள் தேடினர். நேற்று முன்தினம் உடலை மீட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior