உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 12, 2010

குறுவைபட்ட நாற்று நடும் பணி தீவிரம் விருத்தாசலம் பகுதியில் விவசாயிகள் 'பிசி'

விருத்தாசலம் : 

               விருத்தாசலம் பகுதியில் மோட்டார் பாசன விவசாயிகள் தற்போது குறுவைபட்ட நெல் நாற்று நடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். விருத்தாசலத்தை சுற்றியுள்ள கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நெல் பயிரிடும் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் மோட்டார் பாசன விவசாயிகள் என்பதால் சம்பா, குறுவை ஆகிய இரு பட்டங்களிலும் நாற்று நட்டு நெல் அறுவடை செய்வார்கள். சம்பா பட்டம் முடிந்ததைத் தொடர்ந்து தற்போது கோடை கால நடவான குறுவை பட்ட நாற்று நடும் வேலையில் தீவிரமாக உள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன் நாற்று விட்டு வைத்திருந்த விவசாயிகள் தற்போது நடவு பணியில் இறங்கியுள்ளனர். கம்மாபுரம் பகுதியில் ஒரு சில விவசாயிகள் முன் கூட் டியே நாற்றுநட்டு நடவு பணியையும் முடித்து விட்டனர். பெரும்பாலான விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக நடவு பணியை மேற் கொண்டுள்ளதால் இப்பகுதியில் குறுவை நடவு தீவிரம் அடைந்துள்ளது. இதனால் வசாயிகளும், கூலி ஆட்களும் 'பிசி'யாக உள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior