உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 29, 2010

சிதம்பரத்தில் 1,800 ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்பு

கிள்ளை,: 

              தெற்கு பிச்சாவரத்தில் பழுதடைந்த உப்பனாற்று வடிகால் ஷட்டர் சீர் செய்யப்படாததால் பாசனத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் 1,800 ஏக்கர் விளை நிலங் கள் பாதிக்கப்பட்டுள்ளது. 

                 சிதம்பரம் அடுத்த தெற்கு பிச்சாவரம் கான்சாகிப் வாய்க்காலில் பாலம் கட்டி கடை மடை நீரை தேக்கி டி.எஸ். பேட்டை, கீழத்திருக்கழிப்பாலை வருவாய் கிராமங்களை உள்ளடக்கி நடராஜபுரம், கணக்கரப்பட்டு, கவரப்பட்டு, இளந்திரிமேடு, பெரிய காரைமேடு, சின்ன காரைமேடு உள்ளிட்ட சுற்றுப் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1,800 ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.கான்சாகிப் வாய்க்காலில் இருந்து மாரியப்பா நகர், முத்தையா பிள்ளை வடிகால் வாய்க்கால் மற்றும் திருவக்குளம் வடிகால் வாய்க்கால் வழியாக செல்லும் உபரி நீரை தெற்கு பிச்சாவரம் உப்பனாற்று வடிகால் வாய்க்காலில் தேக்கி அப்பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக விவசாயம் செய்து வருகின்றனர்.

                 கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்திற்குரிய தண்ணீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டதில் இருந்து மேட்டுப் பகுதியினர் "தை' பட்டத்திலும், பள்ளப் பகுதியில் உள்ளவர்கள் "நவரை' பட்டத்திலும், விவசாயிகளுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர்.கடந்த 2004ல் ஏற்பட்ட சுனாமியில் விவசாய நிலங்கள் உவர்ப்பு தன்மையாக மாறியது. தற்போது நிலத்தடியில் 10 அடி ஆழத் தில் நீரோட்டம் இருப்பதாலும், கூடுதல் ஆழத்தில் பூமியைத் தோண்டினால் உவர்ப்பு நீர் கிடைப்பதால் போர்வெல் அமைத்தோ, அல்லது கிணற்று பாசனத்தின் மூலம் விவசாயம் செய்யவோ முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாயத்திற்கு மேட்டூரில் இருந்து கான்சாகிப் வாய்க்கால் வழியாக வரும் உபரி நீரை தெற்கு பிச்சாவரம் உப்பனாற்று வடிகால் ஏரியில் "ஷட்டர்' மூலம் தேக்கி வைக்கப்படுகிறது.

                 அவ்வாறு தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் உபரி நீரையும், மழைக் காலங்களில் தேங்கும் நீரை வெளியேற்ற கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் டி.எஸ். பேட்டை சாலையில் தெற்கு பிச்சாவரத்தில் உள்ள உப்பனாற்றில் 12 ஷட்டர்கள் கொண்ட"பாலம்' கட்டப்பட்டது. இதன் மூலம் மழைக் காலங்களில் தேங்கும் நீர் வடிகாலில் திறந்து விடப் படும். ஏரியில் தேக்கி வைக்கப்படும் நீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும்.கடந்த சில ஆண்டுகளாக "ஷட்டர்' பழுதடைந்து, பராமரிப்பில்லாமல் சேதமடைந்துள்ளது. "ஷட்டர் வீல்' செல்லும் பாதை மிகவும் குறுகலாகவும், நடை பாதையில் கால் வைத்தால் சிமென்ட் காரைகள் பெயர்ந்தும் கொட்டுகிறது. ஷெட்டரை சுற்றியுள்ள பக்கவாட்டில் உள்ள பாலமும் சேதமடைந்து, தடுப்பு கட்டைகளும் உடைந்து தொங்கிறது. ஒவ்வொரு ஷட்டருக்கும் இடையே அதிகளவில் இடைவெளி ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. 

               ஷட்டர் பழுதானதால் விவசாயத்திற்கு தேக்கி வைக்கப் பட்டுள்ள தண்ணீர் கசிந்து உப்பனாற்று வடிகாலில் கலக்கிறது. இதனால் விவசாயத்திற்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியாமலும், மழைக்காலங்களில் தண்ணீர் வடியாமலும், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏரியும் தூர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது. பாலத்தின் பக்கவாட்டு சுவரை அகற்றி விட்டு, பாலத்தையும், ஷட்டரையும் சரிசெய்யா விட்டால் விவசாயத்திற்கும், போக்குவரத்திற்கும் மிகுந்த பாதிப்பு ஏற்படும். அத்துடன் இப் பாலத்தின் வழியில் தெற்கு பிச்சாவரம் உள் ளிட்ட கிராமங்களுக்கு நடராஜபுரத்தில் இருந்து குடிநீர் செல்லும் பைப் லைனும் துண்டிக்கப்படும் அபாய நிலை உள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இப்பாலத்தை புதுப்பிப்பதுடன், பழுதடைந் துள்ள ஷட்டரையும் சரி செய்து. லஸ்கர் (நீர்காவலர்) பணியிடத்தை நிரப்பி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior