உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 29, 2010

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கியது

விருத்தாசலம்: 

                விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது.

                விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது. காலை, மாலை என சுழற்சி முறையில் நடைபெற உள்ள இரு பிரிவிலும் சேர்த்து 140 மாணவர்களுக்கு இளங்கலை ஆங்கிலம் பாடத்திற்கான கவுன்சிலிங் நடந்தது.இதில் 1,200 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த கவுன்சிலிங்கில் விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், அகதிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் என 20 மாணவர்களுக்கு இடம் வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுப்ரமணியன் தலைமையில் சேர்க்கை குழு உறுப்பினர்கள் கலாவதி, ஜெயந்தி, மனோன் மணி, துறைத் தலைவர் ராஜப்பன், பேராசிரியர்கள் கதிர்வேல், கவாஸ்கர், வளர்மதி, பசுபதி, மணிவேல் ஆகியோர் பங்கேற் றனர். இன்று 29ம் தேதி கம்யூட்டர் சயின்ஸ் பாடத்திற்கு கவுன்சிலிங் நடக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior