உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 29, 2010

பெட்ரோல் விலை உயர்வு:​ கடலூரில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

கடலூர்:

               பெட்ரோல்,​​ டீசல் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து கடலூரில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில்,​​ சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.​ ​ ​25-ம் தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல்,​​ டீசல்,​​ மண்ணெண்ணெய் மற்றும் சமையல் காஸ் விலைகள் உயர்த்தப்பட்டு உள்ளன.​ இதற்குக் கண்டனம் தெரிவித்தும்,​​ விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும்,​​ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூர் பெரியார் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.​ ​ ​

             ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் சுப்புராயன் தலைமை வகித்தார்.​ மாநிலக் குழு உறுப்பினர் செ.தனசேகரன் கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆளவந்தார்,​​ ஆட்டோ சங்கச் செயலாளர் பாபு,​​ நகரக்குழு உறுப்பினர்கள் தனசிங்,​​ மனோரஞ்சிதம்,​​ குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.​ ​ ​இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பாப்புலியூர் உழவர் சந்தை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.​ மாவட்டக்குழு உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார்.​ ​மாவட்டச் செயலாளர் டி.மணிவாசகம்,​​ மாவட்ட துணைச் செயலாளர் எம்.சேகர்,​​ நகரச் செயலாளர் வி.குளோபு மற்றும் நிர்வாகிகள் நாகராஜன்,​​ விஸ்வநாதன்,​​ பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிதம்பரத்தில்...

                சிதம்பரம் தெற்குரத வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.​ எஸ்.ராஜா தலைமை வகித்தார்.​ நகரச் செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.​ நகரமன்றத் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம்,​​ ராமகிருஷ்ணன்,​​ ஞானமணி,​​ அமுதா,​​ சங்கமேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

44 பேர் கைது:

               விருத்தாசலம் பாலக்கரையில் இருந்து பஸ் நிலையம் வரை ஊர்வலமாகச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்,​​ பஸ் நிலையம் அருகில் மறியலில் ஈடுபட்டனர்.மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் அசோகன்,​​ வட்டக்குழு செயலர் கந்தசாமி,​​ வழக்கறிஞர் சந்திரசேகரன்,​​ சங்கரய்யா உள்பட 44 பேர் கைது செய்யப்பட்டனர்.

பஸ் தொழிலாளர் சங்கம்கண்டனம்:

             பெட்ரோல், ​​ டீசல் விலை உயர்வுக்கு கடலூர் மாவட்டத் தனியார் பஸ் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பண்டரிநாதன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். இந்த விலை உயர்வு சராசரி மக்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அற்ற நிலையை உருவாக்கி உள்ளது.​ ஆட்டோ,​​ டாக்ஸி,​​ சரக்கு வாகனங்களின் கட்டணம் கடுமையாக உயரும்.​ அதன் காரணமாக விலைவாசி உயர்ந்து மக்கள் மீது பொருளாதாரச் சுமை அதிகரிக்கும்.டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டியும்,​​ பஸ் கட்டணத்தை அரசு உயர்த்தாததாலும்,​​ தனியார் பஸ் உரிமையாளர்கள்,​​ தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்து உள்ள ஊதியம் மற்றும் போனஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்க மறுக்கிறார்கள்.​ எனவே விலை உயர்வைத் திரும்பப்பெற வேண்டும் என்றும் பண்டரிநாதன் கோரியுள்ளார்.​ ​பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று,​​ இந்திய சோஷியல் டெமாக்ரட்டிக் கட்சி மாநிலத் தலைவர் தெகலான் பாகவி கோரிக்கை விடுத்து உள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior