உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 29, 2010

ரூ.1 கோடி மீன்பிடி தடைக்கால நிவாரணம்: ஆட்சியர் வழங்கினார்

கடலூர்:

                  கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14,160மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூ.1.13 கோடியை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை வழங்கினார்.

               ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி முதல் 45 நாள்கள் வங்கக் கடலில் மீன்பிடிக்க,​​ மீனவர்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.​ இந்தக் காலம் மீன்கள் இனப்பெருக்கக் காலம் என்பதால்,​​ கடலில் மீன் வளம் குறையாமல் இருக்க,​​ தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.​ கடந்த 9 ஆண்டுகளாக இந்தத் தடை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மீன்பிடித் தடைக்காலத்தில் கடலோர மீனவர் குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில்,​​ தமிழக அரசின் மீன் வளத்துறை நிவாரணத் தொகை வழங்கி வருகிறது.​ கடந்த ஆண்டு தலா ரூ.500 வீதம் 13,625 குடும்பங்களுக்கு ரூ.68,12,500 வழங்கப்பட்டது.​ இந்த ஆண்டு நிவாரணத் தொகை ரூ.800 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.​ அதன்படி 14,160 மீனவர் குடும்பங்களுக்கு ரூ.1,13,28,000 வழங்கப்படுகிறது.​ ​ ​

                திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிவாரணத் தொகை மீனவர்களுக்கு வழங்குவதை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தொடங்கி வைத்தார்.​ நிவாரணத் தொகை வழங்கும் பணி மீன்வளத் துறை மூலம் தொடர்ந்து நடைபெறும்.​ ​இந்த நிகழ்ச்சியில்,​​ விபத்தில் இறந்த இரு மீனவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு மீனவர் நல வாரியம் மூலமாக தலா ரூ.1,02,500 வீதம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior