உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 29, 2010

மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், நாகார்ஜூனா ஆயில் கார்பரேஷன் லிமிடெட் மற்றும் புதுச்சேரி அவிரந்த் கண் மருத்துவமனை சார்பில் இன்று மருத்துவ முகாம்

கடலூர்: 

              மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், நாகார்ஜூனா ஆயில் கார்பரேஷன் லிமிடெட் மற்றும் புதுச்சேரி அவிரந்த் கண் மருத்துவமனை சார்பில் திருச்சோபுரத்தில் இன்று பொது மருத்துவ முகாம் நடக்கிறது.

               நாகார்ஜூனா ஆயில் கார்பரேஷன் லிமிடெட் வளாகத்தில் நடக்கும் முகாமில் இருதயம், பொது மருத்துவம், குழந்தை நல மருத்துவம், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்கப்படும். முகாமில் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சையும் அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயன் பெறும் நோயாளிகள் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை, ரேஷன் கார்டு நகல், உழவர் அட்டை நகல், புகைப்படம் ஒட்டப்பட்டு அதன் மீது கையெழுத்தும், சீல் பதியப்பெற்ற, இருப்பிடச் சான்றிதழ், வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் வரவேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior