உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 29, 2010

சிதம்பரம் பக்கிரி வாய்க்கால் பாலம் : ரூ.6 லட்சத்தில் கட்டுமான பணி துவக்கம்

கிள்ளை: 

              சிதம்பரம் அருகே ஆறு லட்சம் ரூபாய் செலவில் பக்கிரி வாய்க்கால் பாலம் கட்டும் பணி துவங்கியது.

            சிதம்பரம் அருகே நஞ்சைமகத்து வாழ்க்கை சாலையில் வடக்குச்சாவடி கான்சாகிப் வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் பாசன வாய்க்காலான பக்கிரி வாய்க்காலில் தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாலத்தை எட்டுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். சிதம்பரத்தில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வந்தது. ஆங்கிலயேர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பாலம் உடைந்து உள்வாங்கியது. இதனால் சாலை துண்டிக்கும் நிலை ஏற்பட்டது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. 

                  இந்நிலையில் நஞ்சைமகத்து வாழ்க்கை ஊராட்சி தலைவர் தனசேகரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை வைத்தனர். தற்போது ஆறு லட்சம் ரூபாய் செலவில் கல்வெர்ட் பாலமாக கட்டும் பணி துவங்கியது. பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior