உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 29, 2010

மத்திய அரசின் சிறப்பு கல்வி உதவித் தொகை நிர்வாக சிக்கலால் இரண்டு ஆண்டாக நிறுத்தம்

கடலூர்: 

                பள்ளிக் கல்வி இடை நிற்பதைத் தவிர்த்திட மத்திய அரசு வழங்கி வரும் சிறப்பு கல்வி உதவித் தொகை நிர்வாக சிக்கல் காரணமாக தமிழக பள்ளி மாணவர்களுக்கு கடந்த இரண்டாண்டாக வழங்கப்படவில்லை.

               பள்ளிக் கல்வியில் மாணவர்கள் இடை நின்றலை தடுத்திட மத்திய அரசு தேசிய வருவாய் மற்றும் கல்வி உதவித் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது . இதன்படி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு திறனறி தேர்வு நடத்தி அதில் தேர்வு பெறும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் 500 ரூபாய் வீதம் நான்கு ஆண்டிற்கு 24 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கி வருகிறது.அதேப்போன்று பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு 8ம் வகுப்பு ஆதி திராவிட மாணவிகளுக்கு மாதம் 500 ரூபாய் வீதம் நான்கு ஆண்டிற்கு 24 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. இரு வகை உதவித் தொகை பெறும் மாணவ, மாணவிகள் எந்த வகுப்பிலும் தோல்வி அடையாமல் தொடர்ந்து படிக்க வேண்டும்.

                 மத்திய அரசு வழங்கும் இந்த உதவித் தொகை மாநில கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பின்னர் மாவட்ட கல்வித் துறை வாயிலாக அந்தந்த பள்ளிகள் மூலம் சம்மந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வழங்கப் பட்டது.இந்த நடைமுறையில் முறைகேடு நடப்பதாகவும், மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை மாணவர் களை முழுமையாக சென்றடையவில்லை என எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து மத்திய அரசு, கல்வி உதவித் தொகையை மாணவர்களுக்கு நேரடியாக வழங்க நடவடிக்கை எடுத்தது.அதற்காக கடந்த 2008-09ம் கல்வி ஆண்டில் உதவித் தொகைக்கு தேர்வு செய் யப் பட்ட மாணவர்களின் பெயரில் அந்தந்த பகுதிகளில் உள்ள வங்கிகளில் கணக்கு துவங்கவும், வங்கிக் கணக்கு எண்ணை விண்ணப்பத்தில் குறிப்பிட்டு அனுப்பினால், நேரடியாக வங்கியில் பணம் செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

               அதன்படி தேசிய திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும், ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த மாணவிகளும் வங்கிகளில் புதிதாக கணக்கு துவங்கினர். இதன் விவரங்கள் மத்திய அரசுக்கு, மாநில கல்வித்துறை வாயிலாக தெரியப்படுத்தப்பட்டது. ஆனால் இதுவரை மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை கிடைக்கவில்லை. இதுகுறித்து மாநில கல்வித் துறை சார்பில் மத்திய அரசை தொடர்பு கொண்டபோது, மாணவர்கள் கணக்கு துவங்கியுள்ள வங்கிகளின் "ஐ.எப். எஸ்.சி' (ரிசர்வ் வங்கி வழங் கும்) குறியீட்டு எண் குறிப் பிட்டால் மட்டுமே, இங்கிருந்து நேரடியாக வங்கிகளுக்கு பணம் செலுத்த முடியும் என கூறினர்.அதன்படி மாணவர்கள் சேமிப்பு கணக்கு துவங்கிய வங்கிகளுக்குச் சென்று "ஐ.எப்.எஸ்.சி' குறியீட்டு எண்ணை கேட்டதற்கு கிராமப் பகுதிகளில் உள்ள பெரும் பாலான வங்கிகள் இந்த குறியீட்டு எண் பெறவில்லை என்பதும், "கோர் பேங்கிங்' (கம்ப் யூட்டர் மையமாக்கப்பட்ட) வசதி உள்ள வங்கிகளுக்கு மட்டுமே "ஐ.எப்.எஸ்.சி.' குறியீட்டு எண்ணை ரிசர்வ் வங்கி வழங்குவது தெரிய வந்தது.

              மத்திய அரசின் இந்த சிறப்பு கல்வி உதவித் தொகை பெற தமிழகத்தில் தேர்வு பெற்ற மாணவர்களில் பெரும் பகுதியினர் கிராமத்தைச் சார்ந் தவர்களே. இவர்கள் பெரும் பாலும் தங்கள் கிராமத்திலோ அல்லது பள்ளிக்கு அருகாமையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தான் கணக்கு துவங்கியுள்ளனர். இந்த வங்கிகளுக்கு "ஐ.எப். எஸ்.சி' குறியீட்டு எண் இல்லாததால் கடந்த இரண்டு ஆண்டாக மாணவர்களுக்கு மத்திய அரசின் சிறப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் 2009-10 கல்வி ஆண்டிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் திறனறித் தேர்வு நடத்தி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முந்தைய ஆண்டு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படாததால், இவர்களுக்கு வங்கிக் கணக்கு துவங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

                         பள்ளி இடை நின்றலை தவிர்த்திட, கல்வி உதவித் தொகையை ஏழை மாணவர்களுக்கு காலத்தோடு வழங்க மத்திய அரசு தற்போது உள்ள நடைமுறை சிக்கலை மாற்ற முன் வரவேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior