உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 29, 2010

பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு

பண்ருட்டி: 

            பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் 94 ஆயிரம் ரூபாய் உண்டியல் வருமானம் கிடைத்தது.

               பண்ருட்டி திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் கடந்த ஆறு மாதங்களுக்குப் பின் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது.கோவில் நிர்வாக அதிகாரி சிவஞானம், ஆய்வாளர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் பணம் எண்ணப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு "திருப்பணி, தேர் பணி ஏன் துவக்கவில்லை, ஊர் பிரமுகர்கள், கோவில் நிர்வாகிகள் யாரும் இல்லாமல் ரகசியமாக ஏன் உண்டியல் திறந்தீர்கள்' என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கோவில் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் "இன்னும் 15 நாட்களில் கோவில் கும்பாபிஷேக தேதி குறிக்க ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்படும். தேர் வேலை நாளை முதல் துவங்கும்' என்றார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். திறக்கப்பட்ட உண்டியலில் 94 ஆயிரத்து 195 ரூபாய் வருவாய் இருந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior