உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 29, 2010

பி.இ. கலந்தாய்வு: வெளியூர் மாணவர்களுக்கு 50 சதவீத பஸ் கட்டணச் சலுகை

             பி.இ. கலந்தாய்வில் பங்கேற்க வரும் வெளியூர் மாணவர்களுக்கு இரு மார்க்கங்களிலும் 50 சதவீத பஸ் கட்டணச் சலுகை அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

              சென்னையில் நடைபெறும் பி.இ. கலந்தாய்வில் பங்கேற்க வரும் வெளியூர் மாணவர், அவருடன் வரும் ஒரு நபர் என இருவருக்கு இரு மார்க்கங்களிலும் பஸ் கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படுவது வழக்கம். இது தொடர்பாக பி.இ. கலந்தாய்வுக்கு முன்பாக அரசாணையும் வெளியிடப்படும். ஆனால், பி.இ. கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கிய நிலையில் பஸ் கட்டணச் சலுகை பற்றி உயர்கல்வித் துறை எந்த விதமான அறிவிப்போ, அது தொடர்பான அரசாணையோ எதுவும் வெளியிடவில்லை.  

இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி ஆணையர் குமார் ஜெயந்த் கூறியது: 

                பஸ் கட்டணச் சலுகை கடந்த 2007-08-ம் ஆண்டில் இருந்து வழங்கப்படுவதால் அது தொடர்பாக ஆண்டுதோறும் தனியாக அரசாணை வெளியிட வேண்டியதில்லை என்று கூறப்பட்டது. அதனால், கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வழக்கம்போல் இரு  மார்க்கங்களிலும் பஸ் கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்பட வேண்டும் என்று  போக்குவரத்துக் கழகங்களின் அலுவலகங்களுக்கு நேரடியாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

                 பஸ் கட்டணச் சலுகையைப் பெறுவதற்கு, கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதத்தை நகல் எடுத்து, அதை பஸ் பயணத்தின் போது போக்குவரத்து அலுவலரிடம் காண்பிக்க வேண்டும். அவர் அதைப் பெற்று, 50 சதவீத கட்டணச் சலுகை  வழங்கப்பட்டது என்று சான்றளித்து, உரிய பயணச் சீட்டுகளை மாணவர், அவருடன் வரும் நபர் என இருவருக்கு வழங்குவார்.  இதே நடைமுறையை கலந்தாய்வு முடிந்து செல்லும்போதும் பின்பற்ற வேண்டும்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior