உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 29, 2010

போலீஸ் ஸ்டேஷன் முன்தீ குளிக்க முயன்றவர் கைது

குறிஞ்சிப்பாடி: 

             போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

             வடலூரை அடுத்த பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் குணசேகரன் (25). ஆட்டோ டிரைவரான இவருக்கும் இவரது தாய் மாமனான சட்டநாதனுக்கும் தகராறு ஏற்பட்டது. அதில் சட்டநாதனை, குணசேகரன் தாக்கி விட்டார் .இதுகுறித்து சட்டநாதன் கொடுத்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் நேற்று முன்தினம் குணசேகரனை அழைத்து விசாரணை செய்து அனுப்பினர். இரவு 7 மணிக்கு ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த குணசேகரன் தன்னை போலீசார் விசாரணைக்கு அழைத்து அவமானப்படுத்தி விட்டதாக கூறி போலீஸ் ஸ்டேஷன் அருகில் சாலையோர சிப்ஸ் கடையில் இருந்த மண் ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதனைக் கண்டு திடுக்கிட்ட போலீசார் ஓடி வந்து குணசேகரனை தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior