உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 29, 2010

மணல் குவாரியை மூடக்கோரி மறியல் செய்ய முயற்சி

விருத்தாசலம்: 

           நகர் கிராமத்தில் நடக்க இருந்த சாலை மறியல் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின் கைவிடப்பட்டது.

               நல்லூர் அடுத்த நகர் கிராமத்தில் மணிமுக்தா ஆற்றின் கிளை ஆறான மயூரா ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் கடந்த ஆண்டு அரசு மணல் குவாரி தொடங்கப்பட்டது. இதனால் 1,500 ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கபடுவதாகவும், மணல் அள்ளும் பகுதியில் வெள் ளம் தேங்கி ஊருக்குள் நுழையும் அபாயம் இருப்பதாகவும் கூறி அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அப்போதைய கலெக்டர் ராஜேந்திரரத்னு மணல் குவாரியை மூட உத்தரவிட்டார். இந்நிலையில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் மீண்டும் மணல் குவாரி துவங்கியது. இதனை மூடக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று கண்டப்பங்குறிச்சி சாலையில் மறியல் செய்ய போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து நேற்று அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.காலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை தலைவர் ஜோதிவேல், மாவட்டத் தலைவர் அசோகன், செயலாளர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் மறியல் செய்ய வந்தனர். அவர்களிடம் தாசில்தார் ஜெயராமன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் வரும் 30ம் தேதி சமாதானக் கூட்டம் நடத்தி முடிவு செய்யலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. அதனையடுத்து மறியல் முயற்சியை கைவிட்டு கலைந்து சென்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior