உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 29, 2010

மங்களூரில் மாவட்ட மனித மேம்பாட்டு அறிக்கை கருத்து பரப்பு கூட்டம்

சிறுபாக்கம்: 

                மங்களூரில் மாவட்ட மனித மேம்பாட்டு அறிக்கையின் கருத்து பரப்பு மூன்று நிலைகள் கூட்டம் நடந்தது.

               மங்களூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட மனித மேம்பாட்டு அறிக்கையின் கருத்து பரப்பு மூன்று நிலைகள் கூட்டம் நடந்தது. ஒன்றிய ஆணையர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். திட்ட ஆணையர் ராஜாராம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேராசிரியர் மற்றும் திட்ட இயக்குநர் செல்வராஜன் பேசினார். முனைவர் ராமு, அறிக்கையின் முக்கிய முடிவுகள் குறித்து பயனாளிகளுக்கு எடுத்துரைத்தார். முதல் கட்ட கூட்டத்தில் திட்டத் தினை செயல்படுத்தும் அதிகாரிகள், கல்வியாளர்கள், வேளாண் மற்றும் சுகாதாரத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளும், இரண்டாம் நிலை கூட்டத்தில் சுய உதவிக்குழுக்கள் தலைவர்கள், அதன் உறுப்பினர்களும், மூன்றாம் நிலை கூட்டத்தில் ஒன்றிய சேர்மன், துணை சேர்மன், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior