உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 29, 2010

சேத்தியாத்தோப்பை தனி தாலுகாவாக பிரிக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு: 

            சேத்தியாத்தோப்பை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகாவாக பிரிக்க கரும்பு விவசாயிகள் நல சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து எம். ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் நல சங்க தலைவர் சிட்டிபாபு முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு: 

             சேத்தியாத்தோப்பை சுற்றியுள்ள 70க்கும் மேற் பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங் களது அலுவலகங்களான விருத்தாசலம், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் ஆகிய ஊர்களுக்குச் செல்ல குறைந்தது இரண்டு பஸ் மாறி செல்ல வேண்டும். இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 50 கி.மீ., பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் கால விரயம், பொருள் விரயம் ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் கிராமப்புற மக்கள் தாலுகா தலைநகரை அடையத்தக்க வகையில் உரிய பஸ் வசதி இல்லாத பல்வேறு கிராமங்கள் உள்ளன. எனவே காட்டுமன்னார்கோயில், விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய மூன்று தாலுகாவிற்கு உட்பட்ட சேத்தியாத்தோப்பை ஒட்டியுள்ள 70க்கும் மேற்பட்ட கிராமங்களையும் சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி ஆகியவைகளை உள்ளடக்கி சேத்தியாத்தோப்பை தலைமை இடமாக கொண்டு தனி தாலுகாவாக பிரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பபட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior