உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 29, 2010

மக்களிடம் ஆதரவு திரட்டுங்கள்: அ.தி.மு.க.,வினருக்கு ஆதிராஜாராம் கட்டளை

கடலூர்: 

             விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் அ.தி.மு.க., வினர் மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும் என எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில செயலாளர் ஆதிராஜாராம் பேசினார்.

             கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று கடலூர் டவுன்ஹாலில் நடந்தது. இளைஞரணி மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட செயலாளர் சம்பத், தலைவர் அருணாசலம், தொகுதி செயலாளர் சுப்ரமணியன், மீனவரணி தங்கமணி, விவசாய அணி காசிநாதன், முருகமணி, நகர செயலாளர் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் எம்.ஜி.ஆர்., இளைஞரணியின் மாநில செயலாளர் ஆதி ராஜாராம் பேசியதாவது: 

                  இளைஞரணியின் புத்துணர்வு ஏற்படுத்தும் பொருட்டு கட்சியின் செயலாளர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் வார்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். பத்திரிகைகள், "டிவி' க்கள் மற்றும் சினிமாத் துறை அனைத்தையும் கருணாநிதி கைப்பற்றியுள்ளார். அதனால் ஊடகங்கள் நமது செய்திகளை வெளியிடுவதில்லை. ஆகையால் நமது கட்சியின் செயல்பாடுகளையும், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை மக்களுக்கு விளக் கிட தெருமுனை பிரசாரங்கள் நடத்த வேண்டும்.

               இளைஞரணிக்கு தேர்வு செய்யப்படும் நிர்வாகிகள் கட்சியின் முன்னோடிகளின் ஆலோசனைகளை பெற்று கட்சியை பலப் படுத்த புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். மேலும், வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் மாவட்டத்தில் 300 இடங்களில் கட்சிக் கொடியேற்ற வேண்டும்.சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் அல்லது ஜனவரிக்குள் நடைபெற வாய்ப்புள்ளது. அதற்குள் நாம் கட்சியை பலப்படுத்தி வரும் 2011 பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவை தமிழக முதல்வராக அரியணை ஏற்ற வேண்டும்.மத்தியில் ஆளும் காங்., ஆட்சியில் ஓராண்டில் எட்டாவது முறையாக பெட்ரோல், டீசல், காஸ் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந் துள்ளதை மக்களுக்கு விளக்கி இப்போது முதல் இளைஞரணியினர் மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும். இவ்வாறு ஆதிராஜாராம் பேசினார். பின்னர் நகர, ஒன்றிய மற்றும் பேரூராட்சி வாரியாக வார்டு நிர் வாகிகளுக்கு போட்டியிட விரும் புவர்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior