உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 31, 2009

வீடு இடிந்து விழுந்தது: நான்கு பேர் படுகாயம்

நெல்லிக்குப்பம்:

                 வீடு இடிந்ததில் நான்கு பேர் காயமடைந்தனர். நெல்லிக்குப்பம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மோகன் (45). இவரது கூரை வீட்டை சுற்றி மழைநீர் தேங்கி நின்று சுவர் ஈரமாக இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மோகன் (45), அவரது மனைவி இந்திராகாந்தி (35), மகள் திவ்யா (16), கிருபாகரன் (4) பலத்த காயமடைந்தனர். அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின் றனர். இடிந்த வீட்டை கவுன்சிலர் நிர்மலா, அங்கமுத்து, ஆர்.ஐ. ரபீகுதீன், வி.ஏ.ஓ., ரகோத்தமராவ் பார்வையிட்டு காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior