உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 31, 2009

வாடகை செலுத்தாத கோவில் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைப்பு

கடலூர்:

               கடலூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு வாடகை செலுத்தாத ஐந்து கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் அறநிலையத் துறையினர் பூட்டி சீல் வைத்தனர். கடலூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கடைகள் பல உள்ளன. அதில் வாடகைக்கு இருப் பவர்களில் சிலர் வாடகை செலுத்தாமல் காலம் கடத்தி வந்தனர். அவர்களை காலி செய்திட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திருமகள் கோர்ட்டில் உத்தரவு பெற்றார்.

            அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகநாதன் தலைமையில், கோவில் செயல் அலுவலர் மேனகா, ஆய்வாளர் வெங்கடேசன், வி.ஏ.ஓ., சாம்பசிவம் மற்றும் ஊழியர்கள், கோவிலுக்கு வாடகை செலுத்தாத திருப்பாதிரிப்புலியூர் மிஷின் சந்தில் இருந்த உள்ள தண்டபாணி மனைவி சரோஜா, தர்மன் மனைவி ஈஸ்வரி, லாரன்ஸ் ரோடு பாடலி பஜாரில் உள்ள ஈஸ்வரி, ராமு ஆகியோர் வைத்திருந்த ஐந்து கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் காலி செய்து பூட்டி சீல் வைத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior