உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 31, 2009

பு.முட்லூர் ஊராட்சியில் நூலக அறிவு திறன் போட்டி

பரங்கிப்பேட்டை:

                  பு.முட்லூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே அறிவு திறன் போட்டி நடந்தது.

            ஊராட்சி தலைவர் அம்சவள்ளி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரங்கிப்பேட்டைஒன்றிய சேர்மன் முத்துப் பெருமாள் பரிசு வழங்கினார். விழாவில் ஒன்றிய ஆணையர் நடராஜன், துணை தலைவர் முத்துவேல் பங்கேற்றனர். சின்னகுமட்டி ஊராட்சி நூலகத்தில் நடந்த போட்டிக்கு ஊராட்சி தலைவர் நாகப் பன் தலைமை தாங்கினார். ஓவர்சீயர் மோகன் முன் னிலை வகித்தார். போட் டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒன்றிய ஆணையர் சுலோசனா சான்றிதழ் வழங்கினார். விழாவில் துணை ஆணையர் தனமணி, தில்லை நடராஜன், தலைமை ஆசிரியர்கள் கோவிந்தசாமி, லட்சுமணன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior