உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 31, 2009

விளையாட்டு போட்டி பரிசளிப்பு

சிறுபாக்கம்:

                வேப்பூர் அருகே இளைஞர் நற்பணி மன்றம் சார் பில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. வேப்பூர் அடுத்த சிறுநெசலூர் ஊராட்சியில் நேரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நடந்த வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா ஊராட்சி தலைவர் அண்ணாத்துரை தலைமையில் நடந்தது. முன்னாள் ஊராட்சி தலைவர் பரமசிவம் முன்னிலை வகித்தார். குமார் வரவேற்றார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வேப்பூர் இன்ஸ்பெக்டர் பெரியண் ணன் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன் சிலர் ஜெயந்தி, முனியமுத்து, செல்வக்குமார், மதுரைவீரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior