உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 31, 2009

காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை

காட்டுமன்னார்கோவில்:

               காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சத்துணவு ஊழியர் சங்க குமராட்சி ஒன்றிய கிளை செயற்குழு கூட்டம் சங்க தலைவர் மதிவாணன் தலைமையில் நடந்தது. செயலாளர் ரகுமாரன், குமாரராஜா முன் னிலை வகித்தனர். நளன் கிள்ளி வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர்கள் மச்சேந்திரன், சம்பத் பேசினர். கூட்டத்தில் சத்துணவு ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவித்துக் கொள் வது, காலமுறை ஊதியம், முறையான ஓய்வூதியம் வழங்கவும், தகுதி பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு அரசு துறைகளில் வேலை வாய்ப்பு, பணி உயர்வு அளிக்க  அரசை கேட்டுக் கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior