உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

காங்., 125ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

கடலூர் :

                 காங்., கட்சியின் 125ம் ஆண்டு விழா மற்றும் மத் திய அமைச்சர் வாசன் பிறந்த நாள் விழா காங்., கட்சியினரால் கொண்டாடப்பட்டது..கடலூரில் மாவட்ட காங்., அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு இளைஞர் காங்., மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். நகர இளைஞர் காங்.,தலைவர் ராமநாதன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். மாவட்ட தலைவர் நெடுஞ் செழியன் அன்னதானம் வழங்கினார்.

                    நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் அலமு தங்கவேல், ராஜேந்திரன், செல்வராஜ், செல்வபெருமாள், இளைபெருமாள், சுபாஷினி, வெற்றிவேல், ஜான் சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடலூர் நகர காங்., சார்பில் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு <<உடைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கட்சியினர் ரத்ததானம் வழங்கினர். நிகழ்ச்சிக்கு நகர தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார்.பொதுச் செயலாளர் செல்வராஜ், செயலாளர் ஜெயசூர்யா, பஷீர்முகமது, மகளிரணி மங்களலட்சுமி, அப்பு உள்ளிட் டோர் பங்கேற்றனர்.கடலூர் எம்.பி., அலுவலத்தில் நடந்த கட்சியின் 125ம் ஆண்டு விழாவில் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். ரவிக்குமார், பரமாத்மா, அசோக்குமார் உள்ளிட்டோர் கேக் வெட் டினார். நிகழ்ச்சியில் எம்.பி., செய்தி தொடர் பாளர் குமார், லோகநாதன், ராஜ்குமார், சிவகவி, ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சிதம்பரம்: சிதம்பரத்தில் காங்., 125ம் ஆண்டு விழா, சோனியா மற்றும் மத்திய அமைச்சர் வாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.காங்., சேவாதள கூடுதல் தலைமை அமைப் பாளர் சரவணகுமார் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் நாகராஜன், நகர இளைஞர் காங்., தலைவர் ரஜினிகாந்த், துணைத்தலைவர் குணக்குன்று, மாவட்ட மாணவர் காங்., தலைவர் கார்த்தி முன்னிலை வகித்தனர். மேலவீதி சிறை மீட்ட வினாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி 109 பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கீழத் தெரு மாரியம்மன் கோவில் சென்றடைந்தனர். அங்கு நடந்த பால் அபிஷேகத்தை தொடர்ந்து ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலைகள், 200 பேருக்கு சில்வர் குடங்களை முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். மாவட்ட காங்., செயலாளர் ஜெகன்நாதன் இனிப்பு வழங்கினார். மாவட்ட மூப்பனார் பேரவை தலைவர் ஞானம், குமராட்சி ஒன் றிய துணைத் தலைவர் திருவரசமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோன்று மாவட்ட தொழிலாளர் காங்., சார்பில் சிதம்பரம் குஞ்சரமூர்த்தி வினாயகர் கோவில் தெரு முருகன் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் தொழிலாளர் காங்., மாவட்ட தலைவர் ராஜராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior