உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

புழுதிப்புயலில் விபத்தினை எதிர்நோக்கும் வாகன ஓட்டிகள்நெடுஞ்சாலை துறையினர்கவனிப்பார்களா?

திட்டக்குடி :

                    விருத்தாசலம்- ராமநத் தம் நெடுஞ்சாலை தொடர் மழையால் சேதமடைந் தும், புழுதி நிறைந்தும் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக் கும் அபாய நிலை ஏற்பட் டுள்ளது.விருத்தாசலம்- ராமநத் தம் நெடுஞ்சாலை வழியாக புதுச்சேரி, கர்நாடகா, கேரள மாநிலங்களுக்கும், சென்னை, விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் எளிதான போக்குவரத்து வசதி உள்ளது.இவ்வழியாக பள்ளி மற்றும் கல்லூரி வாகனங் கள், இரண்டு சிமென்ட் ஆலைகள், ஒரு சர்க்கரை ஆலைக்கு மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை ஏற்றி செல் லும் கனரக வாகனங்கள், டிராக்டர்கள், டயர் வண்டிகள் என ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களும், டூ- வீலர்களும் சென்று வருகின்றன.இந்நிலையில் நெடுஞ் சாலை தொடர் மழையால் முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக் கற்ற நிலைக்கு மாறியுள்ளது. சாலையின் இருபுறமும் மணல் குவியல் உருவாகி வாகனங்கள் கடக் கும் போது ஏற்படும் புழுதி புயல் எதிரே வரும் வாகனங்களை மறைக்கிறது. டூ- வீலர்களில் செல் லும் வாகன ஓட்டிகள் அணிந்து செல்லும் உடையின் நிறம் பெண்ணாடம் நகரத்தை கடந்து செல்வதற்குள் மாறும் நிலை ஏற்படுகிறது.

              இதனால் வாகனங்கள் நேருக்கு நேர் மோதியும், கனரக வாகனங்களில் சிக்கி டூ- வீலர் வாகன ஓட்டிகள் உயிரிழக்கும் ஆபத்து அதிகரித்து வருகிறது.சில நாட்களுக்கு முன் பெண்ணாடம் மெயின் ரோட்டில் முன்னால் சென்ற வாகனத்தால் ஏற் பட்ட புழுதி புயிலில் சிக் கிய டூ- வீலர் வாகன ஓட்டி நிலைதடுமாறி பஸ்சிற்கு காத்திருந்த பயணியின் மீது மோதினார்.பழுதடைந்த சாலைகளை "பேட்ஜ் ஒர்க்' செய் யும் பணியில் சாலைப்பணியாளர்கள் அவ்வப் போது ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் முறையாக சீரமைக்க தார், கருங் கள் ஆகியவை கிடைக்க பெறாததால் உடைந்த செங்கல், மணல் ஆகியவற்றை கொட்டி பள் ளத்தை நிரப்பி செல்கின்றனர். இதனால் சீரமைத்த இரண்டு நாட்களிலேயே மீண்டும் பழைய நிலைக்கு மாறுகிறது.சில தினங்களுக்கு முன் திட்டக்குடிக்கு வந்த கலெக்டரிடம், கருவேப்பிலங்குறிச்சி முதல் ராமநத் தம் வரை நெடுஞ்சாலையை சீரமைக்க 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிதியை பயன்படுத்தி சாலையை விரைந்து சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior