உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

ஓடையை தூர் வார வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை

சேத்தியாத்தோப்பு :

               காவாலக்குடி குண்டபண்டிதன் ஓடையை தூர் வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து காவாலக் குடி கிராம மக்கள் சார்பில் முதல்வர் மற்றும் கலெக் டருக்கு அனுப்பியுள்ள மனு:

                    கீரப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள காவலாக் குடி கிராமத்தின் முக்கிய வடிகால் வாய்க்காலான குண்டபண்டிதன் ஓடை கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் பேரூர், காவாலக்குடி, கூடலையாத்தூர் ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட ஆயிரம் ஏக்கர் விலை நிலம் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தால் பாதிப்படைந்து வருகிறது. மேலும் கிராமங்களிலும் மழை மற்றும் வெள்ள நீர் புகுந்து வீடுகள் சேதமடைந்து வருகின்றன. எனவே குண்டபண்டிதன் ஓடையை தூர்வாரி வாய்க்காலின் அளவை சரி செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவும், முடிகண்டநல்லூர், பேரூர் சாலையில் உள்ள இந்த வாய்க்கால் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior