உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

கோவில் இடத்தில் குடியிருப்போர் 3ல் ஒரு பங்கு வாடகை செலுத்த முடிவு

விருத்தாசலம் :

                      விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்போர் தற்போது விதித்துள்ள தரை வாடகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே செலுத்துவது என முடிவு செய்துள்ளனர்.விருத்தாசலம் ஜெகமுத்து மாரியம் மன் கோவிலில் பழமலைநாதர் குடியிருப்போர் நல சங்க கூட்டம் நடந்தது. சங்க தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விருத்தகிரீஸ்வர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக தரை வாடகை ரூபாய் 30 என்று மட்டுமே கட்டி வந்தனர். தற்போது மாத தரை வாடகையை கோவில் நிர்வாகம் ரூ 215 ஆக உயர்த்தி உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் அனைவரும் கூலி வேலை செய்யும் ஏழை தொழிலாளிகள் என்பதால் மூன்றில் ஒரு பங்கான ரூ.70 ஐ கட்டுவது என தீர்மானிக்கப்பட்டது

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior