உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

விவசாயி வீட்டிலிருந்த ஐம்பொன் சிலை மீட்பு



விருத்தாசலம் :

                   விவசாயி வீட்டில் மறைத்து வைத்திருந்த ஆறு அங்குலம் உயரம் கொண்ட ஐம்பொன் அம்மன் சிலையை தாசில்தார் மீட்டார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோபாலபுரத்தை சேர்ந்தவர் மணி. இவர் அதே ஊரை சேர்ந்த ரவிசந்திரன் என்பவரது நிலத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மண் வெட்டினார். அப்போது ஐந்து தலை நாகபாம்புடன் கூடிய ஆறு அங்குலம் உயரம் கொண்ட ஐம்பொன் அம்மன் சிலை பூமியிலிருந்து கிடைத்தது. அதனை எடுத்த மணி, எவருக்கும் தெரியாமல் தனது வீட்டிற்கு கொண்டு சென்று அதற்கு பூஜை நடத்தி வந்தார்.தகவலறிந்த விருத்தாசலம் தாசில்தார் பூபதி, கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் குருசாமி மற்றும் அதிகாரிகள் நேற்று கோபாலபுரம் கிராமத்திற்கு சென்று மணி வீட்டில் மறைத்து வைத்து பூஜை செய்து வந்த ஐம்பொன் அம்மன் சிலையை மீட்டு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தார். சிலை கிடைத்தது குறித்து விசாரிக்கப் பட்டு வருகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior