உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

துப்பாக்கியால் சுட்டு கொள்ளை : துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறல்

கடலூர் :

             வடலூரில் குண்டு வீசி நகைக்கடைக் காரரிடம் கொள்ளையடித்த சம்பவத்தில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.வடலூர் கடைவீதியில் நகைக்கடை வைத்திருப்பவர் சிங்காரம். இவர் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு செல்லும்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம மனிதர்கள் சிங்காரத்தின் மோட்டார் சைக் கிளை பிடுங்கினர். சிங்காரம் மோட்டார் சைக்களில் பெட்டியில் பணம் வைத்திருக்கவில்லை.

                   ஆனால் நகைக்கடையின் பீரோ சாவிகள் நிறைய இருந்ததால் மர்ம மனிதர்களிடம் சிங்காரம் போராடியுள் ளார். அதனால் ஆத்திரமடைந்த மர்ம மனிதர்கள் வெடிகுண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் சிங்காரத்தின் மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்து சென்றனர்.தப்பிச்சென்ற மர்ம மனிதர்களை பிடிக்க நெய்வேலி டி.எஸ்.பி., மணி, வடலூர் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி, அமீர் ஜான், சிங்காரவேலு, அம்பேத்கர் ஆகியோர் தலைமையில் 5 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவம் நடந்து 10 நாட்களை கடந்துவிட்டன. போலீசாருக்கு சரியான துப்பு கிடைக்காததால் இதுவரை ஒருவர் கூட கைது செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior