உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

அரசு மருத்துவமனையில் இறந்த வாலிபர் குறித்து விசாரணை



கடலூர் :

                  கடலூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று இறந்த வாலிபர் குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 30ம் தேதி நெல் லிக்குப்பம் வான் பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது பெயர் குமார் (23) எனக் கூறி உடல்நிலை சரியில்லாமல் உள்நோயாளியாக சேர்ந்தார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.இது குறித்து நெல்லிக் குப்பம் போலீசார் விசாரித்ததில், இறந்த வாலிபர் கொடுத்த முகவரி தவறானது எனத் தெரிய வந்தது. இந்நிலையில் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. அவர் நீல நிற கைலியும், வெள்ளை நிற முழுக்கை சட்டையும் அணிந்திருந்தார்.இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior