உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

கடலூர் உழவர் சந்தையில் மர்ம தீ விபத்து ரூ.50 ஆயிரம் சேதம்: தீயணைப்பு வீரர் காயம்

கடலூர் :

                 கடலூர் உழவர் சந்தையில் நள்ளிரவில் ஏற்பட்ட மர்ம தீ விபத்தில் தி.மு.க., பிரமுகரின் காய்கறி கடை எரிந்ததில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள் சேதடைந்தன. தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் காயமடைந்தார்.கடலூர் உழவர் சந்தையில் 50 நாட்டு காய்கறி கடைகளும், இரண்டு மலை காய்கறி கடைகள் உள்ளன. அதில் தி.மு.க., பிரமுகர் ராஜா நடத்தி வரும் மலை காய்கறி கடை நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அள வில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனைக் கண்ட அப்பகுதி வியாபாரிகள் தீயை அணைக்க முயன்றனர்.

                    போதிய தண்ணீர் வசதி இல்லாததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.தகவலறிந்த கடலூர் தீயணைப்பு நிலைய அதிகாரி சாமி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் கடையின் கூரை மீது ஏறி நின்று தீயை அணைக்க முயன்றபோது சிமென்ட் ஓடு உடைந்து விழுந்ததில், தீயணைப்பு வீரர் அருண்குமார் போது அருண்குமார் என்ற வீரர் தீயில் விழுந்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இந்த விபத்தில் கடையில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள் எரிந்த சேதமடைந் தன. விபத்தில் தீயணைப்பு வீரர் அருண்குமார் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச் சைக் காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.இதே கடை சில மாதங் களுக்கு முன் இதேபோன்று நள்ளிரவில் மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்தது. திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior