உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் முதல்வர் ஆர்வம்: அய்யப்பன் எம்.எல்.ஏ., பேச்சு

கடலூர் :

                    மக்களுக்கான திட்டங் களை முதல்வர் செயல்படுத்தி வருவதாக எம்.எல். ஏ., அய்யப்பன் பேசினார்.

               கடலூர் ஒன்றியம் பாதிரிக்குப்பம் ஊராட்சியில் இலவச கலர் "டிவி' வழங்கும் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் கோமதி தலைமை தாங்கினார். தாசில்தார் தட்சணாமூர்த்தி வரவேற்றார். ஒன்றிய அலுவலர் சீனுவாசன் முன் னிலை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் ஸ்ரீமதி, ஒன்றிய கவுன்சிலர்கள் கஜேந்திரன், செந் தில்குமார், தி.மு.க., ஒன் றிய செயலாளர் ஜெயபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

              விழாவில் 5,348 பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி' வழங்கி எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசியதாவது: 

தி.மு.க., ஆட்சியில் தான் தமிழகத்தில் தொழிற் சாலைகள் பெருகியுள் ளன. மாணவர்களுக்கு கல்வி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் என மக்களுக்கு தேவையான திட்டங்களை சட்டமாக்கி செயல்படுத்தி வருபவர் முதல்வர் கருணாநிதி. கடலூரில் செயல்படாமல் இருந்த துறைமுகம் தற்போது செயல்பட துவங்கியுள்ளது. பாதிரிக்குப்பம் ஊராட்சி பகுதியில் வடிகால் வாய்க்கால் கட்ட தொகுதி மேம் பாட்டு நிதி ஒதுக்கி விரைவில் பணிகள் துவங்கப்படும்.இவ்வாறு எம்.எல்.ஏ., பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior