உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

கிராமிய கலைஞர்கள் கடலூரில் ஊர்வலம்

கடலூர் :

                   கிராமிய இசைக் கலைஞர்கள் சங்க 3வது மாவட்ட மாநாடு மற்றும் முப்பெரும் கலை விழாவையொட்டி நேற்று கடலூரில் ஊர்வலம் நடந்தது.கடலூர் மாவட்ட கிராமிய இசைக் கலைஞர்கள் சங்கம் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி 3வது மாவட்ட மாநாடு முப்பெரும் கலைவிழா, நலவாரிய கார்டு வழங்கும் விழா கடலூர் செங்குந்த மண்டபத்தில் நடந்தது. மாநாட்டையொட்டி கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் இருந்து துவங் கிய ஊர்வலத்தை மாவட் டத் தலைவர் மண்ணாங் கட்டி துவக்கி வைத்தார். கவுரவத்தலைவர் ராமமூர்த்தி, ராஜாகண்ணு உட் பட பலர் பங்கேற்றனர்.ஊர்வலத்தில் கிராமியக்கலைஞர்கள் அம்மன், பராசக்தி வேடமிட்டு மேள வாத்தியங்கள் முழங்க பாட்டுப்பாடி முக்கிய வீதியின் வழியாக மண்டபத்தை அடைந்தனர். தொடர்ந்து மாநாடு தொடங்கியது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior