உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

சுகாதாரத் துறையினர் மளிகை கடைகளில் ஆய்வு

ஸ்ரீமுஷ்ணம் :

               ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

                 சுகாதார பணிகள் இயக்குனர் மீரா, ஆயங் குடி வட்டார மருத்துவ அலுவலர் குலோத்துங்கசோழன், ஸ்ரீமுஷ்ணம் மருத்துவ அலுவலர் ஆண் டனிராஜ் ஆகியோரின் உத்தரவின்பேரில் ஸ்ரீமுஷ் ணம் பகுதியில் உள்ள மளிகைக் கடைகளில் விற்கப்படும் பொருட்களில் கலப்படம் உள்ளதா என்பது குறித்து டாக்டர் சிவப்பிரியா, உணவு இன்ஸ் பெக் டர் கொளஞ்சியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.இதில் கடைவீதி பகுதியில் உள்ள மளிகைக் கடைகளில் விற்கப்படும் பொருட்களின் தரம், உற்பத்தி செய்த தேதி, மற்றும் காலாவதியான பொருட் கள் விற்பனை செய்யப்படுகிறதா? உணவுப் பொருட் களில் கலப்படம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் உணவு மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் மஸ்தூர் பிரபாகரன், மோகன்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior