உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

.இலை சுருட்டு புழு தாக்குதல் வேளாண் அதிகாரி ஆலோசனை

காட்டுமன்னார்கோவில் :

            நெற்பயிரில் பரவி வரும் புகையான் மற்றும் இலை சுருட்டுப்புழு தாக் குதலை கட்டுப்படுத்த குமராட்சி வேளாண் உதவி இயக்குநர் லட்சுமணன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

              குமராட்சி வட்டாரத் தில் நெற்பயிரில் புகையான் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த வயலில் நீரினை முழுமையாக வடித்து பயிரை சிறு பட் டங்களாக ஒதுக்கி, அடித் தூரில் ஏக்கருக்கு "அசிபேட்' 250 கிராம், "பீப்ரோபென்சின்' 250 மி.லி., "தையோ மீத்தாக் சாம்' 40 கிராம், "வைக்ளோரோவாஸ்' 250 மி.லி., "இமிடாகுளோப்ரிட்' 40 மி.லி., இதில் ஏதேனும் ஒரு மருந்தை கைத்தெளிப்பான் மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.குமராட்சி வட்டாரத்தில் தற்போது சில கிராமங்ளில் இலை சுருட்டு புழு காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த ஏக்கருக்கு "பைசோபாஸ்' 250 மி.லி., "மோனோ குரோட் டோபஸ்' 400மி.லி., "கார் பரில்' 500 மி.லி., இதில் ஏதாவது ஒன்றை கைத்தெளிப்பானால் தெளித்து பயிர்களை பாதுகாக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior