உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

மனு நீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள்

ராமநத்தம் :

                  ராமநத்தம் அடுத்த ஒரங்கூர் ஊராட்சியில் நடந்த மனு நீதி நாள் முகாமில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஊராட்சி தலைவர் திருசங்கு தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் அம்பிகா, மனுக்கள் பிரிவு துணை ஆட்சியர் ஜெயக் குமார், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அலுவலர் பாலசுப்ரமணியன், சமூக நல அலுவலர் புவனேஸ்வரி, குழந்தை நல மருத்துவர் காந்திமதி முன்னிலை வகித்தனர். சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜெயக்குமார் வரவேற்றார். முகாமில் கலெக்டர் சீத்தாராமன் முதியோர் உதவித்தொகை 18 பேருக்கும், தையல் மெஷின், விவசாய கருவிகள் உட்பட 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.நபார்டு மற்றும் கிராமச்சாலை உதவிக்கோட்ட பொறியாளர் மணி, குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் மணிமோகன், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் பத்மநாபன், போக்குவரத்துக் கழக முதுநிலை <உதவி பொறியாளர் அண்ணாமலை, விருத்தாசலம் தனி வட்டாட்சியர் திருநாவுக்கரசு, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் ஞானஸ் கந்தன், மங்களூர் ஒன்றிய ஆணையர்கள் திருமுருகன், ஜெகநாதன், கால்நடை மருத்துவர்கள் சுப்ரமணியன், கார்த்திக், ரூபா, ராமநத்தம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மாணிக்கம், ராஜலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஜெயராமன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior