உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

ஆட்டோ மீது லாரி மோதல் இளம்பெண் பலி

புவனகிரி :

           ஆட்டோ மீது லாரி மோதியதில் இளம் பெண் இறந்தார். புவனகிரியை சேர்ந்தவர் அருள். இவரது மனைவி விஜயா(35), மகள்கள் அனுசுயா(17), அபிநயா(14) ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலை வடலூரில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு ஆட்டோவில் வந்துக் கொண் டிருந்தனர். ஆட்டோவை தனசேகரன் ஓட்டி வந்தார். தெற்கு திட்டு அருகே எதிரே வந்த லாரி மோதியது.அதில் படுகாயமடைந்த 4 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அனுசுயா இறந்தார். புவனகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior