உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

மூத்த குடிமக்கள் சங்கத்தில் முப்பெரும் விழா

திட்டக்குடி :

                      பெண்ணாடம் தொழிலாளர் பென்சனர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா, தைப்பூச மாலை அணியும் விழா, சிறப்பு வெள்ளி வழிபாடு ஆகிய முப்பெரும் விழா இறையூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் நடந்தது.விழாவிற்கு அருணாசலம் தலைமை தாங்கினார். பத்மாவதி, கோவிந்தராசு, கற்பகவள்ளி, செந்தமிழ்செல்வி முன்னிலை வகித்தனர்.

                       விழாவில் மத நல்லிணக்கம், மனித நேயம், இயற்கை வளம், ஆலை வளர்ச்சி வேண்டியும், கிறிஸ்துமஸ் விழா, 2010ம் ஆண்டு துவக்கம் நலமுடன் துவங்கவும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இரண்டாம் கட்டமாக சக்தி மாலை அணியும் விழாவில் வீராசாமி, ரெங்கநாதன் மாலை அணிந்தனர். மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ஆதிபராசக்தி உருவப்படத்திற்கு கரூர் செல்வாம்பாள் குழுவினர் மூலமந்திரம், விநாயகர் 108 மற்றும் 1008 கவசம் பாடினர்.தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பொன்னேரி, சிலுப்பனூர், பெண்ணாடம், டி.பழூர், அண்ணாநகர், திட்டக்குடி, இறையூர், கூடலூர் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஜெகதாம்பாள் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior