உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 25, 2010

ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கலை இலக்கிய விழா

ஸ்ரீமுஷ்ணம் :

               ஸ்ரீமுஷ்ணம் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கலை இலக்கிய விழா நடந்தது.

                  ஸ்ரீமுஷ்ணம் எஸ்.பி.ஜி. ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கலை இலக்கிய விழா நடந்தது.  ஆசிரியர் பயிற்சி நிறுவன தாளாளர் சவுந்திரராஜன் தலைமை தாங்கினார். பொறுப்பு முதல்வர் தண்டபாணி வரவேற்றார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் பத்மநாபன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, நடனம், கவிதை உள்ளிட்ட பிரிவுகளில் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.

                   த.வீ.செ. மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலை இலக்கிய விழாவில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் கள் மனோரஞ்சிதம் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். ஆசிரியர் பயிற்சி முதல்வர் ஆறுமுகம் வரவேற்றார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பியூலா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior