உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 25, 2010

குடியரசு தின விழாவையொட்டி வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

கடலூர் :

            கடலூரில் நாளை குடியரசு தின விழா நடைபெறவுள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.

                 குடியரசு தினவிழாவின் போது அசம்பாவிதங்களை ஏற்படுத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனையொட்டி கடலூரில் நாளை மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா நடைபெறவுள்ள அண்ணா விளையாட்டரங்கில் நேற்று வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் ராமலிங்கம் தலைமையிலான குழுவினர் கண்ணி வெடிகளை கண்டறியும்  "மைன் சூப்பர்' என்ற நவீனரக கருவியை கொண்டு சோதனை மேற்கொண்டனர்.  மேலும், மோப்ப நாய் சாண்டி வரவழைத்து  தனியாக சோதனை நடத்தப்பட்டது. அதேபோன்று பஸ் நிலையம், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் கோவில்களில் சோதனை மேற்கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior