உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 25, 2010

இலவச தியான பயிற்சி வகுப்பு கீரப்பாளையத்தில் துவக்கம்

புவனகிரி :

                 கீரப்பாளையத்தில் விஜயகுமார சுவாமிகளின் இலவச தியான பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கியது.

              சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம் சமுதாய நலக் கூடத்தில் ஏழு வாரங்களுக்கான இலவச தியான பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கியது. பயிற்சி வகுப்பை தோப் புக்கொல்லை விஜயகுமார சுவாமிகள் துவக்கி வைத்தார். அதில் புவனகிரி, கீரப்பாளையம், சிதம்பரம் மற்றும் கடலூர் பகுதியில் திரளானவர்கள்  பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். பயிற்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் தங் களது உடல் உபாதைகளில் இருந்து விடுபட கை விரல்கள் மூலம் தியான பயிற்சி அளிக்கப்பட்டது. ஏழு வாரங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் மட் டும் பயிற்சி வகுப்பு நடக்கிறது.  பயிற்சி வகுப்பு ஏற்பாடுகளை திருமலைராஜன், ராஜப்பா, பாலு செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior