உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 25, 2010

கலந்தாய்வு கூட்டம்

சிறுபாக்கம் :

                  மங்களூர் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

                   ஆணையர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். ஆணையர் புஸ்பராஜ் முன்னிலை வகித் தார். துணை ஆணையர் சுந்தரம் வரவேற்றார். கூட்டத்தில் வேலை உறுதியளிப்பு திட்டப் பணிகளை தொடங்குதல், தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், பணியாளர்களின் கூலித் தொகை நிர்ணயித்தல், குடியரசு தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட் டம் நடத்துதல் உள்பட பல் வேறு திட்டப் பணிகள் குறித்து கலந்தாய்வு நடந்தது.

                    கூட்டத்தில் பொறியாளர் மணிவேல், மேலாளர் கண்ணன், திட்ட மேற்பார்வையா ளர் சங்கர், கிருஷ்ணமூர்த்தி, ஒருங்கிணைப் பாளர் குணசேகரன், ஊராட்சி தலைவர்கள் பொன்முடி, ராஜபெருமாள், ராஜேந்திரன், முத்துசாமி, வரதராஜன், தங்கவேல், கந்தசாமி, சந்திரா, மாரியம்மாள், ரமேஷ், கண்ணகி கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior