உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 25, 2010

ஏழைகள் முன்னேற்றக்கழக பொதுக்கூட்டம்

ஸ்ரீமுஷ்ணம் :

                  ஸ்ரீமுஷ்ணத்தில் ஏழைகள் முன்னேற்றக்கழக பொதுக்கூட்டம் நடந்தது.

                 கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். காட்டுமன்னார்கோயில் ஒன்றிய செயலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் அர்ச்சுனன் சிறப்புரையாற்றினார். இதில் என்.எல்.சி., நிறுவன சுரங்கப் பணிகளால் நீர் மட்டம் குறைந்து வரும் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டிமடம், சேத்தியாத்தோப்பு, சோழத் தரம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் என்.எல்.சி., நிறுவனம் இலவச குடிநீர் வழங்க வேண்டும். தாலுகாவில் உள்ள அனைத்து தாழ்த் தப்பட்ட மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் ஆகிய மூன்று அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினர். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஸ்ரீராம், கீரப்பாளையம் ஒன்றிய துணைத்தலைவர் தம்பியாப்பிள்ளை, கட்சி நிர்வாகிகள் பீட்டர், எட்வர்டுராஜ், ஆசீர்வாதம், பாலு, ஜோசப் ராஜ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர துணை தலைவர் மாயகிருஷ்ணன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior