உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 25, 2010

சிதம்பரத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்

சிதம்பரம் :

             சிதம்பரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டது.

                சிதம்பரம் நெடுஞ்சாலைத்துறை பகுதிக்குட்பட்ட வேணுகோபல் பிள்ளை தெரு, பஸ் நிலைய சாலை மற்றும் எஸ்.பி., கோவில் தெரு பகுதிகளில் போக் குவரத்துக்கு இடையூராக சாலை யோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்திருந் தது. பஸ் நிலையம் எதிரில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வந்த புகாரையடுத்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து நேற்று அகற்றியது. அறிவிப்பின்படி ஏற்கனவே பெரும் பாலானவர்கள் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற் றிக்கொண்டனர். மேலும் பொக்லைன் இயந்திரம் மூல மும், நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் மூலமும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. டி.எஸ்.பி., மூவேந்தன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior